சொத்து தகராறில் தம்பியை உருட்டுகட்டையால் அடித்துக்கொன்ற அண்ணன்

மொடக்குறிச்சி, அக்.16: சொத்து பிரிப்பதில் அண்ணன், தம்பி ஏற்பட்ட தகராறில் தம்பியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணன் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவருக்கு சசிகுமார் (38), கனகராஜ் (36) என இரு மகன்கள் உள்ளனர். தாய் மீனாட்சியின் பெயரில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரிப்பதில் அண்ணன், தம்பி இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கனகராஜ் நேற்று முன்தினம் சசிகுமார் வீட்டிற்கு சென்று மீனாட்சி மற்றும் அண்ணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று சசிகுமார் உருட்டுக்கட்டையுடன் தம்பி கனகராஜ் வீட்டிற்கு சென்று எப்போது பார்த்தாலும் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறாய் என சத்தம் போட்டார். அப்போது உருட்டுக்கட்டையால் கனகராஜை சசிகுமார் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு தலைமாறைவாக உள்ள சசிகுமாரை ேதடி வருகின்றனர்.

Related Stories: