வாரச்சந்தை திறப்பு

மானாமதுரை. அக்.2: மானாமதுரையில் வியாழன்தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். கொரோனோ தொற்று காரணமாக மார்ச் மாத இறுதியில் வாரச்சந்தை மூடப்பட்டது. தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து நேற்று காலை வாரச்சந்தை திறக்கப்பட்டது. சுமார் 400க்கும் அதிகமாக காய்கறி, பழங்கள், மளிகை என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டது. இதனால் நேற்று சந்தையில் காய்கறி வாங்க கூட்டம் அலைமோதியது.

Related Stories: