நாகர்கோவில், அக். 2: நாகர்கோவிலில் பிட் இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. மத்திய அரசு அனைவரும் உடல்தகுதியுடன் ஆரோக்கியத்துடன் இருக்கும் வகையில் ‘பிட் இந்தியா’ என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. அனைவரும் விளையாட்டு, யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினால் மனஅழுத்தம், நோய் நொடியில்லாமல் வாழ வழிவகை செய்யும் என்பது இந்த பிட் இந்தியாவின் நோக்கம். இந்த வருடம் கொரோனா தொற்று காரணத்தால், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மாவட்டம் தோறும் ஒரு நாள் பிட் இந்தியாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்டத்தில் நேற்று காலை பிட் இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.