கொள்ளிடம்,அக்.2: கொள்ளிடம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த நெப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி லட்சுமி (80). இவர் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் அருகே மாதானம் அருகே உள்ள செருகுடி கிராமத்தில் உள்ள தனது மகள் கஸ்தூரி வீட்டில் தங்கி இருந்துள்ளார். நேற்று அதிகாலை அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது மழையின் காரணமாக குடிசை வீட்டின் பக்கவாட்டில் உள்ள மண் சுவர் மழையின் காரணமாக ஈரமாகி இருந்த நிலையில் இடிந்து விழுந்துள்ளது.