ஈரோடு, அக். 2: உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக நேற்று காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அங்கு சென்றபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனை கண்டித்து ஈரோடு மூலப்பாளையத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உத்தர பிரேத முதல்வர் பதவி விலக வேண்டும், ராகுல் காந்தியை காட்டுமிராண்டி தனமாக தள்ளிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.