திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சிக்குட்பட்ட குபேரன் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, தெருவின் வலது பக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர், தெருவின் இடது பக்கத்தில் கால்வாய் அமைக்க வேண்டும், வலது பக்கம் அமைத்தால் தீக்குளிப்போம் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, கால்வாய் அமைக்கும் பணி பாதியில் கைவிடப்பட்டு பணியாளர்கள் திரும்பிச் சென்றனர்.