ெகாரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றாதவர்களால் பாதிப்பு அபாயம்

கரூர், அக். 1: கொரனோ பரவலை தடுக்கும் வகையில் அக்டோபர் 31ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில் ஏராளமானோர் இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பேரூந்து, மார்க்கெட், டாஸ்மாக், வர்த்தக நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் சமூக இடைவெளி இல்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. இதனால், கொரோனா பரவல் அதிகமாகும் நிலை மாவட்டத்தில் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து விதிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: