பரமக்குடி, அக்.1: பரமக்குடி பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கிராமங்களில் மழை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடத்தவில்லை. சில கிராமங்களில் தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அரியனேந்தல், பொட்டிதட்டி, செம்மனூர், பார்த்திபனூர் இடையர் குடியிருப்பு உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.