பெரணமல்லூர், செப்.30: பெரணமல்லூர் பிடிஓ அலுவலகத்தில், மண்டல துணை பிடிஓவாக பணிபுரிந்து வந்தவர் சேகர்(58). இவர் கடந்த 8ம் தேதி, ஆரணியில் இருந்து பெரணமல்லூருக்கு பணியிட மாறுதல் பெற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், நேற்று மடம் கிராமத்தில், இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய, மண்டல துணை பிடிஓ சேகர் தனது பைக்கில் புறப்பட்டு சென்றார். ஆளியூர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.