சங்கரன்கோவில். செப்.26: சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் ரூ.2.87 கோடி, குருவிகுளத்தில் ரூ.7.38 கோடி எனமொத்தம் ரூ.10.25 கோடியில் குடிநீர் வழங்கும் திட்ட பூமிபூஜை நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையபாண்டியன், ரமேஷ், வாசுதேவன் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்து பேசுகையில், சங்கரன்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த இடையன்குளம், என்ஜிஓ காலனி, புளியம்பட்டி, களப்பாகுளம் கிராமங்களும், குருவிகுளம் ஒன்றியத்தில் பி.ஆலங்குளம், சிதம்பராபுரம், கீழஅழகுநாச்சியார்புரம், வாகைகுளம், கே.ஆலங்குளம், பழங்கோட்டை, சுந்தரேசபுரம், குளக்கட்டாக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், ஜமீன் தேவர்குளம், பிச்சை தலைவன்பட்டி, இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், நக்கமுத்தலன்பட்டி, பாறைப்பட்டி, முக்கூட்டுமலை, சின்னகாளம்பட்டி, ஆலடிப்பட்டி, மேலமரத்தோணி, சம்சிகாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.