சுற்றுச்சுவர், படிக்கட்டு அமைக்கக்கோரி குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், செப். 25: திருவில்லிபுத்தூரில் நகரின் மையப்பகுதியில், ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் உள்ளது. இக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து கிடக்கிறது; பல்வேறு இடங்களில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. இவைகளை சீரமைக்க வலியுறுத்தி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாலை குளத்துக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், நகர் குழு ரேணுகாதேவி, மாவட்ட குழு திருமலை மற்றும் நகர் குழு மரியடேவிட், மாவட்ட செயற்குழு மகாலட்சுமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: