ராமநாதபுரம், செப்.25: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் 31.8.2020 வரை காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் ஆகியோர்களுக்கான காலிப்பணியிட விபரம் இனச்சுழற்சி ஒதுக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் விளம்பரம் செய்யப்படும். அமைப்பாளர் பணிக்கான தகுதிகள்: இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020)ல் கல்வித் தகுதி: பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பழங்குடியினர் 8வது தேர்ச்சி, தோல்வி பெற்றிருக்க வேண்டும்.