ஈரோடு, ஆக.22: தினக்கூலி பணியாளர்களுக்கு நடப்பாண்டிற்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.750 ஆக விரைவில் நிர்ணயித்து வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி ஈரோடு மாவட்ட தலைவர் சின்னசாமி, கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டிரைவர், மேசன், வாட்ச்மேன், மஸ்தூர், கார்டனர், கார்பெண்டர் போன்ற 30க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் குறைந்தபட்ச கூலி நிர்ணயித்து, அதனடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.