அந்தியூர், ஆக.22: அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (38). இவர், இதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் அம்மை நோய் இருந்ததால், முத்துராஜின் தந்தை வீடான வெள்ளயம்பாளையத்திற்கு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த முத்துராஜ், மதுவுக்கு அடிமையானார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மது அருந்துவிட்டு போதையில் இருந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.