திருச்செங்கோடு, மார்ச் 20: திருச்செங்கோடு அடுத்த ஏ.இறையமங்கலம் கிராத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை மற்றும் படித்துறை கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில், திருச்செங்கோடு தாலுகா ஏ.இறையமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் தடுப்பணை மற்றும் படித்துறை அமைக்குமாறு, பொன். சரஸ்வதி எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று காவிரியின் குறுக்கே புதிதாக தடுப்பணை மற்றும் படித்துறை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.