மன்னார்குடி, மார்ச் 19: கோரோனோ வைரஸ் தொற்று நோய் பரவுதல் தடுத்தல், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுசுகாதாரம் மற்றும் மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் தொற்றுநோய் பரவுதல் கட்டுப்படுத்தும் பணி, கோரோனோ வைரஸ் தொற்று நோய் பரவுதல் தடுத்தல், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மன்னார்குடி வர்த்தக சங்கம், திருமண மண்டபங்கள் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோரோனோ வைரஸ் தொற்று நோய் பரவுதல் தடுத்தல் பணிகளுக்கான சிறப்பு அலுவலரும், கூடுதல் ஆட்சியருமான சரவணன் தலைமை வகித்தார். தாசில்தார் கார்த்திக், நகராட்சி ஆணையர் (பொ) திரு மலைவாசன், மருத்துவ அலுவலர் டாக்டர் அபூர்வ தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் பாரதி ஜீவா, செயலாளர் ஆனந்த், அமைப்பு செயலாளர் எஸ்எம்டி கருணாநிதி, ஹோட்டல் சங்கம் சார்பில் சதிஷ், தங்கும் விடுதி சார்பில் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.