பைக் மோதி விவசாயி சாவு

முத்துப்பேட்டை, மார்ச் 19: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). விவசாயியான இவர் கடந்த 27ம்தேதி சைக்கிளில் கடைதெருவிற்கு சென்றபோது, பின்னால் வந்த செங்காங்காடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன் ஓட்டி வந்த பைக் மோதியதில் படுங்காயமடைந்தார். உடனே அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமகிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: