நாமக்கல், மார்ச் 19: நாமக்கல்லில், தவ்ஹித் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்பு சார்பில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், 97 குழந்தைகள் உள்ளிட்ட 457 பேரை கைது செய்தனர்.
நாமக்கல்லில் நேற்று, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்பு சார்பில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை வகித்தார். சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்றது.