வலங்கைமான் அடுத்த தொழுவூரில் நெல் மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்தது

வலங்கைமான், மார் 18: வலங்கைமான் அடுத்த தொழுவூர் பகுதியில் மன்னார்குடி சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயமின்றி அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த தொழுவூர் அரசு பாலிடெக்னிக் அருகே வலங்கைமான் பகுதியிலிருந்து நீடாமங்கலம் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரி நள்ளிரவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் லாரியை ஓட்டிவந்த வந்தவாசி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பன்னீர் செல்வம் (45) என்பவர் அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

Related Stories: