வாலாஜாபாத், மார்ச் 18: வாலாஜாபாத் பேரூராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினியை பேரூராட்சி ஊழியர்கள் தெளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், மருத்துவமனை, கருவூல அலுவலகம், வங்கிகள், பஸ் நிலையம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு, பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளித்து சுகாதாரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.