மதுரை, மார்ச் 18: ஹேண்ட்வாஷ், சோப்புகள், முகக்கவசம் என கொரோனா பாதுகாப்பு பொருட்களை சரியான விலைக்கு விற்க வேண்டும் என்று மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மதுரை கெமிஸ்ட் அன்ட் டிரக்கிஸ்ட் அசோசியேசன் சார்பில் மருந்து விற்பனையாளர்களுக்கான கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. சங்க தலைவர் கணசேன் தலைமை வகித்தார். மதுரை மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ரவிசந்திரன் பேசும்போது, ‘‘கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகடைகளில் விற்கப்படும் மருந்துகள், ஹேண்ட்வாஷ், சோப்புகள் மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட வழி செய்ய வேண்டும்.