மணப்பாறையில் வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் நாசம்

மணப்பாறை, மார்ச் 16: மணப்பாறை காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மலையாளன் மகன் முத்து(42). இவரது 2 மாடி வீட்டில் நேற்று முன்தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த சுமார் 3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தினர். அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: