மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருச்சி ஏப்.23: திருச்சி ரங்கம் சுதர்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி யசோதரா தேவி (75). ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர் நேற்றுமுன்தினம் காலை தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென யசோதரா தேவி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து யசோதரா தேவி ரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: