போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு

திருச்சி, ஏப். 23: மகாவீர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்றுமுன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி மாநகரில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுகிறதா? என போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த பிரசாந்த் (30) என்ற வாலிபர் மதுபோதையில் போலீஸ்காரர் அஜ்மல்கானிடம் தகராறு செய்தார். இதுகுறித்து அஜ்மல்கான் அளித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீசார் பிரசாந்த் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: