துறையூர் அருகே பரிதாபம் தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

 

துறையூர், ஏப். 24: திருச்சி மாவட்டம் துறையூர் மங்களாபுரம் பகுதியில் நாய்கள் கடித்து பெண் புள்ளிமான் உயிரிழந்தது. துறையூர் திருச்சி சாலையில் உள்ள மங்களாபுரம் டாஸ்மாக் கடை அருகே பெண் புள்ளிமான் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண் புள்ளி மானை பார்த்தபோது அது நாய்கள் கடித்து குதறியதால் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்ட துறையூர் வனத்துறையினர் புலிவலம் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் தண்ணீர் பற்றாக்குறையால் கிராம பகுதிக்கு தண்ணீர் தேடி வருகிறது. அவ்வாறு தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெருநாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post துறையூர் அருகே பரிதாபம் தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: