உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி நடுநிலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

 

துறையூர், ஏப். 26: திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புவி தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இதில் முசிறி எம்ஐடி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சந்தோஷ் குமார் கரண், சிவக்குமார், சிவ பாலகணேசன், சுதாகர், சௌரவ் லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 22 அன்று உலக புவி தினத்தையொட்டி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி மற்றும் கோள்கள் மாற்று நெகிழி என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பான ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் அஷோக் குமார் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வேளாண் மாணவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

The post உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி நடுநிலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: