திமுக உட்கட்சி தேர்தல்

சிவகங்கை, மார்ச் 17:  திருப்புவனம் அருகே சொட்டதட்டி கிராமத்தில் திமுக உட்கட்சி தேர்தலுக்கான படிவங்களை நிர்வாகிகள் அளித்தனர்.

திமுக உட்கட்சி 15வது தேர்தலுக்கான மனுக்கள் பெறுவது, பூர்த்தி செய்து மனுக்கள் அளிக்கும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இப்பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. சொட்டதட்டியில் கிளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான படிவங்களை பூர்த்தி செய்து திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் தலைமைக்கழக பிரதிநிதி முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமாரிடம் நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன், மானாமதுரை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாகனி செந்தில்குமார், திருப்புவனம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நாராயணன் மறறும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: