மதுரை, மார்ச் 17: பறிபோன தனது சொத்தை மீட்டு தரும்படி டிரைசைக்கிளில் வந்த மூதாட்டி, கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
மதுரை மாவட்டம், பொதும்பை சேர்ந்த ஆதப்பன் மனைவி முனியம்மா(75). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முனியம்மா நேற்று டிரைசைக்கிளில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டர் வினயிடம் கொடுத்து புகார் மனுவில், ‘‘ எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 20 சென்ட் விளைநிலத்தில் விவசாயம் செய்து வந்தேன்.