கலெக்டரிடம் டிரைசைக்கிளில் வந்து மனு கொடுத்த மூதாட்டி

மதுரை, மார்ச் 17: பறிபோன தனது சொத்தை மீட்டு தரும்படி டிரைசைக்கிளில் வந்த மூதாட்டி, கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

மதுரை மாவட்டம், பொதும்பை சேர்ந்த ஆதப்பன் மனைவி முனியம்மா(75). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முனியம்மா நேற்று டிரைசைக்கிளில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டர் வினயிடம் கொடுத்து புகார் மனுவில், ‘‘ எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 20 சென்ட் விளைநிலத்தில் விவசாயம் செய்து வந்தேன்.

இந்த நிலத்தை மூத்த மகன் பறித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். இதனால் சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்து வருகிறேன். முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி பறிபோன எனது சொத்தை மீட்டு எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்து, இதுபற்றி மதுரை வடக்கு தாசில்தார் விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: