பண்ருட்டி, மார்ச் 17: பண்ருட்டி அருகே கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் கோபாலகிருஷ்ணன் (30). இவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சிவசங்கரி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.