திண்டுக்கல், மார்ச் 17: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சிலுக்குவார்பட்டி கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி அஞ்சல், பழைய சிலுக்குவார்பட்டி ஊர் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், எங்கள் பகுதிக்கு மிக அருகில் சிலுக்குவார்பட்டி அமைந்துள்ளது. மேற்படி கிராமத்தில் பெருவாரியாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக்கடை இருந்து வந்தது.