உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 17:சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பழைய நாட்டண்மை கட்டிடம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில துணை தலைவர் தியாகராஜன் பேசினார். 7வது ஊதியக்குழுவின் நிலுவை தொகையை டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு  தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 1ம் தேதியே  சம்பளம் வழங்க வேண்டும். பணி செய்யும் தொழி லாளர்களுக்கு முறையாக  உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உதயகுமார், கருப்பண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: