கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

 

கெங்கவல்லி, ஏப்.29: கெங்கவல்லி அருகே பெரியபுனல்வாசல் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் கோகுல்(24). இவருக்கும் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி வடக்குத்தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகள் செல்வி(24) என்பவரும் கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்த போது, பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த விஷயம் செல்வி பெற்றோருக்கு தெரிய வந்தவுடன், மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சின்னபுனல்வாசல் பகுதியில் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து கெங்கவல்லி எஸ்ஐ செந்தில்குமரன், இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், செல்வியை காதல் கணவனுடன் அனுப்பி வைத்தனர்.

The post கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: