பரமத்தி வேலூர, மார்ச் 17: பரமத்திவேலூர் அருகே அரசு பஸ் மோதி பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் தளிகையை அடுத்துள்ள சுப்பாநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சஞ்சய்(23). இவர் பரமத்தி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று மாலை, உடன் படித்து வரும் ஜங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் பார்த்திபன்(23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். பைபாஸ் சாலை சந்திப்பில் சென்றபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.