காஞ்சிபுரம், மார்ச் 17: பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், லேப் டாப் வழங்கக் கோரி கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.பெரிய காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2017-19ம் கல்வி ஆண்டில் நாங்கள் பிளஸ் 2 படித்தோம். ஏழை குடும்பத்தைச் சேர்ந்க நாங்கள் 13 பேர், தற்போது டிப்ளமோ படித்து வருகிறோம்.