நாகர்கோவில், மார்ச் 13 : நாகர்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் கிழித்து, மார்பில் கடித்து காயப்படுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் அருகே உள்ள கீழ வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (63). விவசாயி. இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. இவரது சொத்தின் அருகே நாகமணி (48) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் செல்வனின் தென்னந்தோப்பில் இருந்து தொடர்ச்சியாக இளநீர் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தமிழ் செல்வன் பூமி பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் தமிழ் செல்வன் மீது ஆத்திரம் அடைந்த நாகமணி, கடந்த 10ம் தேதி தென்னந்தோப்பில் உள்ள வேலி கற்களை உடைத்து சேதப்படுத்தினார். மொத்தம் 25 கற்கள் உடைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தமிழ் செல்வன் தட்டிக்கேட்ட போது அவரை நாகமணி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தமிழ் செல்வன், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாகமணி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 427, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்
தனர்.