மணமேல்குடி, மார்ச் 13: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாபட்டினத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முமுவதும் தொடர் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.