அரியலூர், மார்ச் 13: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியலிருந்து 9 நபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு நிதியுதவிக்கான காசோலைகளை கலெக்டர் ரத்னா வழங்கினார். அதில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாற்றுத்திறானி சிவகாமி என்பவருக்கு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் பங்கேற்க பயண செலவுக்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, பெட்டிக்கடை வைப்பதற்காக நாகமங்கலத்தை சேர்ந்த முருகானந்தத்துக்கு ரூ.15 ஆயிரம் காசோலை, நாயகனைப்பிரியாளை சேர்ந்த அற்புதசெல்விக்கு ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கினார்.