திருச்செங்கோடு, மார்ச் 13: திருச்செங்கோட்டில், வருகிற 15ம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது.இதில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற 15ம் தேதி காலை 10 மணிக்கு, திருச்செங்கோடு சிஎச்பி காலனியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது.