தூத்துக்குடி, மார்ச் 13: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வுக்கு மார்ச் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி (டெராடூன்) 2021 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு 02-.01.-2008 க்கு பின்னதாகவும், 01-.07-.2009-க்கு முன்னதாகவும் பிறந்தவர்களும், 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு 2020 ஜூன் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது.