அந்தியூர், மார்ச் 13: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கரும்பாறை வனப்பகுதியில் கொம்புதூக்கிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் குண்டம் திருவிழா வனத்துறை அனுமதியுடன் நடக்கும். அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
நேற்று கோயில் வளாகத்தில் பகர்தர்கள் பொங்கல் வைத்தும், சாமி தரிசனம் செய்து அம்மை அழைத்தல் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, 40 அடி நீளத்திற்கு கோயில் வளாகத்தில் தயார் செய்யப்பட்டது. பின் குண்டத்திற்கு பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கி தொடங்கி வைத்தனர்.அதன்பின், பக்தர்கள் வரிசையில் வந்து, கையில் பூ சுற்றிய பிரம்பை ஏந்தி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைந்தது.