திருவண்ணாமலை, மார்ச் 13: திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை எஸ்பி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, திருவண்ணாமலை பாவாஜி நகரில் புதர் மறைவிடத்தில் 4 பேர் கும்பல் கஞ்சா மூட்கைளுடன் இருந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், கஞ்சா மூட்டைகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.