சாத்தான்குளம், மார்ச் 12: சாத்தான்குளத்தில் ஒரு அடிக்கு உயர்த்தி அமைக்கப்பட்ட புதிய சாலையின் ஓரத்தில் முறையாக மணல் நிரப்பப்படாததால் விபத்து அபாயம் நிலவிய நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் சீரமைத்துள்ளனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றியுள்ள முதலூர், முத்துகிருஷ்ணாபுரம், விஜயராமபுரம் செல்லும் சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்தது. இதுகுறித்த புகார்களை அடுத்து பழைய சாலையை உடைத்து புதிய சாலை அமைக்கும் பணி பணி கடந்தமாதம் துவங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக சாலை அமைக்கப்பட்ட போதும் ஒரு அடி உயரத்துக்கு உயர்த்தி அமைக்கப்பட்டதோடு சாலையோரம் முறையாக மணல் நிரப்பாததால் ராட்சத பள்ளம் போல காணப்பட்டதோடு விபத்து அபாயமும் நிலவியது.