காங்கயம், மார்ச் 12:கோைட வெயில் தாக்கம் அதிகரிப்பால் காங்கயம் பகுதியில் குழாய் வைத்த மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.கோடை தொடங்குவதற்கு முன்பே கடந்த 15ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் அவதிகுள்ளாகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக திருப்பூர், தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் அனல்காற்று வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக கரும்பு சாறு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கயம் பகுதிகளில் தற்போது மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என அழைக்கப்படும் மண் பானைகள் அதிகம் விற்கப்படுகின்றன. இதில் குழாயுடன் கூடிய மண்பானைகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. என்னதான் வீட்டில் பிரிஜ் இருந்தாலும், மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது போல் சுவை இருப்பதில்லை. மேலும் தற்போது இயற்கை முறைக்கு மக்கள் அதிகம் முக்கியத்தும் தருகின்றனர்.