சென்னை, மார்ச் 12: டியூப் லைட், பேன், ஏசி உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி பழுதடைவதால் புதுக்கோட்டையில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு (திமுக) பேசியதாவது:புதுக்கோட்டை தொகுதி கருக்காகுறிச்சியில் 110 கேவி திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: அங்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ள. ஏற்கனவே கொடுத்த இடம் நீர்நிலை புறம்போக்காக இருப்பதால் மாற்று இடம் கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.பெரியண்ணன் அரசு: புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி, பட்டத்திகாடு ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு நடுவில் சரியான இடம் உள்ளது. மேலும் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் மின்சாரம் அதிகமாகவோ, குறைவாகவோ வரும் போது பியூஸ் போகிறது. அதை சரி செய்துவிட்டு சென்ற பிறகு வீட்டில் இருக்கக்கூடிய டியூப், பேன், ஏசி உள்ளிட்ட பொருட்கள் பழுதடைகிறது. சீரான மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும்.