25 விவசாயிகள் பங்கேற்பு மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தின சிறப்பு விழா

தஞ்சை, மார்ச் 12: தஞ்சை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்ட சார்பில் சிந்தனை பண்ணை மகளிர் தின சிறப்பு விழா. மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் (பொ) அமுதா வரவேற்றார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் அய்யாறு புகழேந்தி வாழ்த்தி பேசினார். துணை செயலாளர் வல்லம் தாஜ்பால் கவிதை வாசித்தார். பொருளாளர் குருநாதன் புரவலர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் நடுவர் பாவலர் தஞ்சை தருமராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் புவனேஸ்வரி, உதவி பேராசிரியர் காளீஸ்வரி, தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி முனைவர் பட்ட ஆய்வாளர் பவானி சசிகுமார், ஆல்வின் மேல்நிலைப்பள்ளி இளநிலை தமிழாசிரியர் மஞ்சுளா ஆகியோரும் பேசினர். நூலகர் வடிவேலு நன்றி கூறினார்.

Related Stories: