கோவில்பட்டி, மார்ச் 11: கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். இளையரசனேந்தலைச் சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை கோவில்பட்டி ஒன்றியத்தில் சேர்க்கக்கோரி, விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோதும் பலனில்லை. மேலும் தென்காசியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இதுகுறித்து மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆவேசமடைந்த தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் நூதன போராட்டம் நடத்த முடிவுசெய்தனர்.