கொல்லிமலையில் ஆசிரியர்கள் போராட்டம்

சேந்தமங்கலம், மார்ச் 11: கொல்லிமலை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் பூங்குளம்பட்டியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் அரசு வழங்கும் இலவச நோட்டு, புத்தகங்களை நேரடியாக பள்ளிக்கே சென்றடையுமாறு வழங்க வேண்டும். அதற்கான செலவுத் தொகையை அனைத்து பள்ளிகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆசிரியர்களை அலுவலக பணிகளில் ஈடுபடுத்த கூடாது. குறைதீர் முகாமில் அலுவலர் நேரில் மனுக்களை பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் வட்டார செயலாளர் மணிகண்டன் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: