நீதிமன்றத்தில் தகராறு செய்தவர் கைது

மதுரை, மார்ச் 11: நீதிமன்றத்தில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ஜெயன்குமார் (38), வழக்கு விசாரணைக்காக மதுரை போதைப் ெபாருள் தடுப்பு நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் திடீரென தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரின் பேரில், ஜெயன்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி மதுசூதணன் உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: