நாமக்கல், மார்ச் 10: நாமக்கல் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் பூவராகவன்(27). ஆட்டோ டிரைவரான இவர், நாமக்கல் கடைவீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் 21 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் காதலை ஏற்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று நாமக்கல் வந்த பூவராகவன் அவரது நண்பர்கள் செந்தில்(24), குமார்(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கடத்த திட்டமிட்டுள்ளார்.