சத்தியமங்கலம், மார்ச் 10: சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடினர். பண்ணாரி அம்மன் குழுமத்தின்தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரி ஆலோசகர் எம்.பி.விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் சாதனையாளர்களுக்கான விருது தொழிலதிபர் கீதா நாகு, செயிண்ட் ஆஞ்லோஸ் மற்றும் இணைஆசிரியர் ரேவதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை தொழிலதிபர் நந்தினிரங்கசாமி பேசுகையில், பாரதியார், காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோர் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்கள். தற்போது பெண்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.